டெல்லி: காங்கிரஸ், ஆர்.ஜே.டி. நடத்திய கூட்டத்தில் எனது தாயை அவமதித்து விட்டனர் என பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். பீகார் மாநில வாழ்வாதாஅப்போது, கடந்த வாரம், பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் சார்பில் பிகாரில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரையின்போது, தலைவர்கள் யாரும் நிகழ்ச்சிக்கு வராத நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மைக்கில், பிரதமர் மோடியின் தாயைப் பற்றி கருத்துக் கூறியிருந்தது பேசுபொருளாகியிருந்த நிலையில், அது பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
இந்நிலையில் பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பை காணொலி மூலம் தொடங்கி வைத்த பிரதமர் மோடி இது குறித்து பேசினார். அப்போது; தாய்கள்தான் எங்கள் உலகம். அவர்கள் மரியாதைக்குரியவர்கள். பாரம்பரியம் நிறைந்த இந்த பீகாரில் சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ், ஆர்.ஜே.டி. நடத்திய கூட்டத்தில் எனது தாயை அவமதித்து விட்டனர். அரசியலுக்கு அப்பாற்பட்ட எனது தாயை அவமதித்து விட்டனர். பீகாரில் ஒவ்வொரு தாயும் எதிர்க்கட்சியினரின் வசை பேச்சால் புண்பட்டுள்ளனர்ஆர்.ஜே.டி., காங்கிரஸ் கட்சியினர், மறைந்த எனது தாயை வைத்து அரசியல் செய்கின்றனர்.
எதிர்க்கட்சியினர் இந்த அளவுக்கு அரசியல் செய்வார்கள் என்று நான் கற்பனைகூட செய்ததில்லை. பீகாரில் ஒவ்வொரு தாயிடமும் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.