Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

அடுத்தடுத்து தகாத உறவால் முடிந்த வாழ்க்கை; கள்ளக்காதலன் விட்டு சென்றதால் 2 பிள்ளைகளின் தாய் தற்கொலை

அருமனை: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே புண்ணியம் பகுதியை சேர்ந்தவர் பிந்து (34). இவரது கணவர் ஜெயக்குமார். கடந்த 15 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்த இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், ஜெயக்குமார் இறந்துவிட்டதால் சில மாதங்களுக்கு முன் மருதம்பாறை பகுதியை சேர்ந்த வின் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இவர் மூலம் ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2வது கணவரையும் பிரிந்தார். இதன்பிறகு புண்ணியம் பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு மகன், மகளுடன் சென்றுவிட்டார்.

இதனிடையே பிந்துவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த விஜி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு 2பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். வந்துள்ளனர். விஜிக்கு மனைவியும் கல்லூரியில் படிக்கும் மகன், மகள் உள்ளனர். கள்ளத்தொடர்பு விவகாரம் விஜியின் மனைவிக்கு தெரியவந்ததும் கண்டித்துள்ளார். இதையடுத்து விஜி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிந்து, அவருக்கு பிறந்த 5ம் வகுப்பு படிக்கும் மகன், எல்கேஜி படிக்கும் மகள் ஆகியோருடன் கடையாலுமூடு அருகே பிலாங்தோட்டவிளை ஆர்சி சர்ச் சாலையில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கவைத்துள்ளார். இதன்பிறகு விஜி பகலில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வாடகை வீட்டில் பிந்துவுடன் தங்கி வந்துள்ளார்.

இந்தநிலையில் விஜி வீட்டுக்கு வராததால் அவரது மனைவி அருமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார். இதையடுத்து விஜியிடம் விசாரணை நடத்த காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றபோது அங்கு போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் விஜி தனது மனைவி, பிள்ளைகளிடம் சென்றுவிடுவதாக கூறியுள்ளார். இதன்பிறகு பிந்து வீட்டுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி தெரிந்ததும் பிந்து விஜியிடம் சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தபோது விஜி மறுத்துவிட்டார்.

இதனால் விரக்தியுடன் நேற்று வீட்டில் தனியாக இருந்த பிந்து தென்னைக்கு பயன்படுத்தும் விஷ மாத்திரையை தின்று மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிந்து ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கடையாலுமூடு போலீசார் சென்று பிந்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.