Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘‘காதலிக்க மாட்டேன்’’ என்றதால் கல்லூரி மாணவி தந்தைக்கு மிரட்டல்: வாலிபர் மீது 9 பிரிவில் வழக்கு

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி. இவர் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;

இன்ஸ்டாகிராம் மூலம் கொரட்டூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார்(29) அறிமுகமாகி நட்பு முறையில் பழகினார். இதன்பின்னர் செல்போனில் நண்பர்களாக பேசிவந்த நிலையில், திடீரென்று விஜயகுமார் தவறான பாதைக்கு சென்றார். இதனால் ஒரு மாதத்துக்கு முன்பு அவரது நட்பை முறித்துக் கொண்டேன். இதன்பிறகு எனக்கு பலமுறை தொடர்புகொண்டபோது விஜயகுமாரின் போனை எடுக்க வில்லை. இதனால் விஜயகுமார் தினமும் நான் கல்லூரிக்கு செல்லும்போது பின்தொடர்ந்து வந்து தன்னை காதலிக்கும்படி மிரட்டுகிறார். திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அச்சுறுத்துகிறார்.

இதுபற்றி தந்தையிடம் சொன்னால் மன வேதனை அடைவார் என்பதால் சொல்லாமல் இருந்தேன். ஆனால் நாளுக்குநாள் விஜயகுமார்தொந்தரவு கொடுத்துவந்ததால் எனது தந்தையிடம் தெரிவித்துவிட்டேன். இதனால் தந்தை என்னை தினமும் கல்லூரியில் கொண்டுபோய் விட்டு வருகிறார். நேற்றுமுன்தினம் தந்தையுடன் பைக்கில் கல்லூரிக்கு சென்றபோது பின்தொடர்ந்துவந்த விஜயகுமார், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் எங்களை மறித்தார். பின்னர் என் தந்தையின் முன்னாடியே தன்னை காதலிக்கும்படி மிரட்டியதால் கோபம் அடைந்த தந்தை தட்டிக்கேட்டார்.

அப்போது விஜயகுமார், ‘’எனது காதலுக்கு நீ தான் தடையாக உள்ளாயா’’ என்று கேட்டு எனது தந்தையை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றார். இதன்பிறகு தினமும் இரவு நேரங்களில் வீட்டுக்கு வந்து காதலிக்கும் படி மிரட்டுகிறார். எனவே, விஜயகுமாரால் எனது குடும்பத்துக்கு ஆபத்து வரும் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில், ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர் கொரட்டூர் பகுதியில் உள்ள விஜயகுமார் வீட்டுக்கு போலீசார் சென்றபோது விஜயகுமார் இல்லை. நேற்றிரவு முகப்பேர் டி.வி.எஸ் காலனியில் சுற்றிவந்த விஜயகுமாரை பிடித்து போலீசார் விசாரனை நடத்தினர். அப்போது அவர், ‘’கல்லூரி மாணவியை காதலித்து வந்தேன். ஆனால் என்னை காதலிக்க விரும்பவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்து காதலிக்கும்படி மிரட்டினேன். ஆனால் அவர் அப்பாவுடன் பைக்கில் சென்றதால் எனக்கு கோபம் ஏற்பட்டது. இதனால் அவர்களை மிரட்டினேன்’ என்றார்.

இதையடுத்து ஆபாசமாக பேசுதல், தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துவதற்கான தண்டனை, வன்முறையாக பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் உட்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.