Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிஎம்டிஏ உறுப்பினர் செயலருக்கு விதிக்கப்பட்ட வாரன்ட் வாபஸ்

சென்னை: சென்னையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக ரத்தினசபாபதி என்பவர் உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராஜ்குமார் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்த வழக்கு நேற்று உரிமையியல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் பிரகாஷ் நேரில் ஆஜரானார்.

அவரது சார்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, வேண்டுமென்று எந்த உத்தரவையும் மீறவில்லை. நீதிமன்ற உத்தரவின் நகல் தங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனக்கூறி வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கைது உத்தரவை திரும்ப பெற்றுக் கொள்ளதாக அறிவித்தார்.