சென்னை: சீனாவிலிருந்து காட்டுப்பள்ளி துறைமுகம் வந்த ரூ.20 கோடி மதிப்பிலான 80 கண்டெய்னர் திருட்டப்பட்டுள்ளதாக என புகார் ஹாங்காங் நிறுவனத்தின் தமிழ்நாடு சிஇஓ சுப்புரமணியன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் தெரிவித்தார். சீனாவிலிருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு கடந்த மாதம் 90 கண்டெய்னரில் PVC ரெசின் இறக்குமதி செய்யப்பட்டது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். கண்டெய்னரை அபகரித்த தனியார் பிளாஸ்டிக் நிறுவனம், ஷிப்பிங் கம்பனி உள்பட 21 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement