Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரம்மபுத்திரா நதியில் மிகப்பெரிய அணைக்கட்டும் சீனா: இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி!!

டெல்லி: பிரம்மபுத்திரா நதியில் மிகப்பெரிய அணைக்கட்டும் பணியை தொடங்கி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது சீனா. இந்த அணை கட்டப்பட்டால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு. நமது அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தில் யார்லங் சாங்போ நதியில் ரூ.14 லட்சம் கோடி மதிப்பில் பிரமாண்டமான அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. அருணாச்சலம் பிரதேசத்துக்கு அருகில் ஓடும் இந்த நதி இந்தியாவில் பிரம்மபுத்திரா என அழைக்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை சீன பிரதமர் லீ கெச்சியாங் அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். தற்போது அணைக்கட்டும்பணி சீனா தொடங்கியுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் இந்தியா மட்டும் வங்க தேசத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், இதனால் கோடிக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இங்கு அணை கட்டுப்படுவது குறித்து கடந்த ஆண்டு இந்தியா, சீனாவிடம் கவலை தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் சீனா அணைக்கட்டுவது குறித்து எந்த கவலையும் வேண்டாம் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், திபெத்தில் சீனா அணைக்கட்டுவது குறித்து எந்த கவலையும் வேண்டாம். பிரம்மபுத்திரா ஒரு வலிமையான நதி, இந்த நதி ஒரே ஒரு நீர் ஆதாரத்தை மட்டுமே சார்ந்தது இல்லை. பிரம்மபுத்திராவின் நீரோட்டத்தை சீனா தொந்தரவு செய்தால், தண்ணீர் வரத்து குறையும்.

இதன் விளைவாக பல்லுயிர் பெருக்கம் குறையும். இங்கு பரமாண்டமான அணை கட்டப்படுவதை குறித்து சீனாவுடனும், நம் அண்டை நாடுகளுடனும் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கும் நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் உடனடியாக இந்தியா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவை எடுக்க வேண்டும் என்பதில் அனைவரும் விருப்பமாக உள்ளது.