Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

2 குழந்தைகளின் தந்தை சிறுமியை கடத்தி திருமணம்: போக்சோவில் கைது

திருமங்கலம்: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே களத்திகுளத்தினை சேர்ந்தவர் முனியாண்டி(24). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கும், திருமங்கலம் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தனக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதை மறைத்து, முனியாண்டி, சிறுமியுடன் பேசி வந்துள்ளார்.

கடந்த 4 தினங்களுக்கு முன்பு திருமங்கலம் வந்த முனியாண்டி, சிறுமியை திருமங்கலம் பஸ் ஸ்டாண்டிற்கு வரவழைத்து கடத்தி சென்று திருமணம் செய்து தனியாக வீடு பிடித்து வசித்து வந்துள்ளார். மகள் மாயமானது குறித்து, பெற்றோர் அளித்த புகாரில் திருமங்கலம் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்த சிறுமியை மீட்டனர். பின்னர் முனியாண்டியை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.