Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருக்குறளை அனைவரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக் காவியம் படைத்த லிடியனுக்கு முதல்வர் பாராட்டு

சென்னை: திருக்குறளை அனைவரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக் காவியம் படைத்த லிடியனுக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் காவியம் படைத்தனர். இசையில் தோய்ந்து பல திறமைமிக்க குரல்களில் ஒலித்திடும் குறளமுதத்தினை அனைவரும் கேட்டிட வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வரின் சமுக வலைதள பதிவில்:

பதின்பருவம் கடக்கின்ற இளம் வயதிலேயே, உலகப் பொதுமறையான திருக்குறளைக் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக்காவியம் படைத்துள்ள உடன்பிறப்புகள் லிடியன் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரைப் பாராட்டி வாழ்த்துகிறேன்!

இசையில் தோய்ந்து பல திறமைமிக்க குரல்களில் ஒலித்திடும் குறளமுதத்தினை அனைவரும் கேட்டிட வேண்டும்! குறளிசைக்காவியம் எல்லோர் உள்ளங்களில் நிலைபெற்றிட வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.