சிதம்பரம் அரசு பொது மருத்துவமனையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு பொது மருத்துவமனையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர், தலைமை மருத்துவ அதிகாரி ஆகியோர் நேரில் ஆஜராகி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக விளக்கமளித்துள்ளது.


