டெல்லி: காசோலை மோசடி வழக்குகளை முடித்து வைப்பதற்கான விதிகளை உச்சநீதிமன்றம் மாற்றி அமைத்துள்ளது. தாமோதர் பிரபு வழக்கு தீர்ப்பில் வழங்கிய வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் மாற்றியமைத்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன் மற்றும் என்.வி. அஞ்சாரியா அமர்வு இத்தகைய உத்தரவு பிறப்பித்தது.
*குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சிய பதிவுக்கு முன் செக் தொகை தந்தால் விசாரணை நீதிமன்றம் அபராதம் இன்றி வழக்கை முடித்துவைக்கலாம்.
*சாட்சியம் பதிவுசெய்து, தீர்ப்புக்கு முன் தொகை செலுத்தினால், கீழமை நீதிபதி கூடுதலாக 5% வசூலித்து வழக்கை முடிக்க பரிந்துரைக்கலாம்.
*அமர்வு நீதிமன்றம் அல்லது ஐகோர்ட்டில் மேல்முறையீடு நிலுவையில் உள்ளபோது, செக் தொகையில் 7.5%ஐ கூடுதலாக பெற்று வழக்கை முடித்துவைக்கலாம்.
*உச்சநீதிமன்றம் முன்பு தொகையை செலுத்தினால், செக் தொகையில் கூடுதலாக 10%ஐ செலுத்த வேண்டும்.
*தாமோதர் பிரபு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி, கீழமை நீதிமன்றத்தில் 2-வது விசாரணைக்குள் வழக்கை முடிக்க எந்த அபராதமும் கிடையாது என தெரிவித்தது.