சென்னை: சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது. இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை விலகுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், சென்னையில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 22 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், வேலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூரில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.