Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேலை வாங்கி தருவதாக மோசடி!: சென்னையில் காணாமல் போன இளநீர் வியாபாரி கிருஷ்ணகிரியில் சடலமாக மீட்பு..!!

கிருஷ்ணகிரி: சென்னையில் காணாமல் போன இளநீர் வியாபாரி கிருஷ்ணகிரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டியில் உடல் மற்றும் தலை தனித்தனியாக மீட்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சின்னப்பம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் சென்னை முகப்பேரில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 4ம் தேதி வெங்கடேசன் காணாமல் போனதாக அவரது மகன் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 2 தினங்களுக்கு முன்னர் தந்தையை கொன்று விட்டு, தாயை பிடித்து வைத்து மிரட்டுவதாக மீண்டும் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் 3 பேரை பிடித்து விசாரித்த போது வெங்கடேசன் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.18 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வேலை வாங்கி தராமல் இழுத்தடித்தால் பணம் கொடுத்தவர்கள் ஆத்திரமடைந்து படுகொலை செய்தது அம்பலமாகியுள்ளது. அரசு ஆசிரியர் உட்பட இருவர் இளநீர் வியாபாரி வெங்கடேசன் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். தலையை துண்டித்து கொல்லப்பட்டாரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெங்கடேசனின் மகனுடன் விசாரணைக்காக மாறுவேடத்தில் சென்னை போலீசார் சேலம் சென்றுள்ளனர்.