Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுதந்திர தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது, மீறினால் கடுமையாக நடவடிக்கை : சென்னை ஆட்சியர் எச்சரிக்கை

சென்னை : சென்னை மாவட்டத்தில், 15.08.2025 (வெள்ளிக்கிழமை) அன்று சுதந்திர தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும் மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " வருகின்ற 15.08.2025, வெள்ளிக்கிழமை அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையங்கள் / மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 15.08.2025 (வெள்ளிக்கிழமை) அன்று சுதந்திர தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அவர்கள் தெரிவித்துள்ளார்.