சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்த 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானிலை வட்டமடித்து கொண்டிருக்கின்றன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை திடீரென இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துவருகிறது. இந்தனால் சென்னை சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து 149 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பலத்த சூறைகாற்று காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது. இந்த நிலையில், அந்த விமானம் பெங்களூரு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இதே போல் டெல்லி, மும்பை, கொச்சி, கோவா, மதுரை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வந்த 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துகொண்டிருக்கிறது. இதனை அடுத்து மழை நின்ற பிறகு ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்க அதிகாரிகள் ஏற்பாடுசெய்துள்ளனர். அதேபோல் சென்னையில் இருந்து அபுதாபி, மஸ்கன், டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, தூத்துக்குடி உள்ளிட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.