சென்னை : எல்லாத் தவறுகளுக்கும் பொதுநல வழக்கு, சர்வரோக நிவாரணி அல்ல. தனிப்பட்ட பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள பொதுநல வழக்கை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இது சம்பந்தமாக விதிகள் வகுக்கக் கோரியும் ஆதித்யா சிங் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.
+
Advertisement
