Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் முதல் முறையாக ஏசி மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னையில் முதல் முறையாக ஏசி மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. 233 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 55 மின்சார ஏசி பேருந்துகள் உட்பட 135 மின்சார பேருந்து சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதல் முறையாக ஏசி வசதி கொண்ட மின்சார பேருந்து சேவைகள் இன்று முதல் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை வியாசர்பாடியை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 55 ஏசி மின்சார பேருந்துகள் உட்பட 135 மின்சார பேருந்துகள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

135 மின்சார பேருந்துகளில் 55 ஏசி மின்சார பேருந்துகளும், 80 மின்சார பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. இதற்கான பெரும்பாக்கம் பணிமனை பணியாளர்களுக்கான ஓய்வறை, பராமரிப்பு கூடம், அலுவலக நிர்வாக கட்டிடம் உள்ளிட்ட வசதிகளுடன் புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மின்சார பேருந்துகளுக்கான சார்ஜிங் பாயிண்ட்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மின்சார பேருந்துகளுக்காக வியாசர்பாடி, பெரும்பாக்கம், சென்ட்ரல், பூந்தமல்லி, தண்டையார்பேட்டை ஆகிய 5 பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் ஜூன் 30 ஆம் தேதி முதல் வியாசர்பாடி பணிமனையில் இருந்து மின்சார பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 மின்சார பேருந்துகள் 11 வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் கட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து இன்று முதல் 55 மின்சார ஏசி பேருந்துகள், 80 மின்சார பேருந்துகள் உட்பட 135 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

49.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள பெரும்பாக்கம் மின்சார பேருந்துகள் பணிமனை மற்றும் இரண்டாம் கட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 233 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 55 மின்சார ஏசி பேருந்துகள் உட்பட 135 மின்சார பேருந்து சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து பேருந்தில் பயணம் செய்தார்.