செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏரியின் நீர்மட்டம் 21 அடியை எட்ட உள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வர்த்து 800 கன அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 20.20 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிருஷ்ணா கால்வாய் வழியாக 400 கன அடியும், மழை நீர் கால்வாய் மூலம் 400 கன அடியும் வருகிறது.
+
Advertisement