குன்றத்தூர் அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மாலை 4 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட உள்ளது. ஏரியின் நீர்மட்டம் 21 அடியை எட்ட உள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வர்த்து 800 கன அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 20.20 அடியாக உள்ளது. மாலை 4 மணிக்கு விநாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர். செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிருஷ்ணா கால்வாய் வழியாக 400 கன அடியும், மழை நீர் கால்வாய் மூலம் 400 கன அடியும் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மாலை 4 மணிக்கு 100 கன அடி தண்ணீர் திறப்பதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உபரி நீர் செல்லும் வாய்க்கால் உள்ள சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் இருபுறம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
+
Advertisement