காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழையால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
சேலம்: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழையால் கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நாளை மாலைக்குள் விநாடிக்கு 45,000 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என ஒன்றிய நீர்வளத்துறை தெரிவிப்பு