சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் பணம் வைத்து சீட்டுக்கட்டு விளையாடிய 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களில் நாகமுத்து (40) என்பவர் மெரினா கடற்கரையில் பிரபலமான சுந்தரி அக்கா கடையின் உரிமையாளரின் மகன் என்பது தெரியவந்தது. மேலும், இவர் வாட்ஸப் குழு மூலம் பணம் வைத்து சூதாடும் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
+
Advertisement