Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கட்டுப்பாட்டை இழந்த கார் சரக்கு வாகனத்தில் மோதி விபத்து தம்பதி உயிரிழந்தனர்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டம் ஆவடி அடுத்து திருவேற்காடுஈஸ்வரிநகர் ஏழாவது தெருவை சேர்ந்தவர் 41 வயதான அறிவரசன் இவரது மனைவி சரண்யா தனியார் நிறுவன மேலாளராக பணியாற்றிவருகிறார். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஆண் பெண் என இரட்டை குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி அறிவரசன் மனைவி உடன் டிவிஎஸ் ஸ்கூட்டரில் ஆவடி வசந்தம் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக தறிகெட்டு வந்த கார் ஸ்கூட்டரில் மோதி இழுத்து சென்றது. கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் நின்றுஇருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி தலைக்குப்பிற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோரவிபத்தில் அறிவரசன் சரண்யா தம்பதி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இந்த விபத்தை ஏற்படுத்தியது 46 வயதான அரசு மருத்துவர் என்பது தெரியவந்தது.

இந்த விபத்தில் அவர் காயம் அடைந்து சம்பவ இடத்தில் விழுந்து கிடந்தார் அவரை மீட்ட போலீசார் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் காரை வேகமாக ஒட்டி சென்றபோது திடீர் என வலிப்பு ஏற்பட்டு விபத்து நடந்தது தெரியவந்தது. மருத்துவர் சிகிச்சை முடிந்து நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.

அவர் மீது அதிவேகமாக கார் ஓட்டுதல் அலட்சியமாக வாகனம் ஓட்டி உயிர் இழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.