Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இன்று முதல் 14ம் தேதி வரை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, இன்று முதல், வரும் 14ம் தேதி வரை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: ரயில்வே நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல், வரும் 14ம் தேதி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில், பகல் மற்றும் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று முதல், வரும் 14ம் தேதி வரை காலை 9.20 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், இரவு 10.30 மணி முதல் அதிகாலை 2.45 மணி வரையிலும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது தாம்பரத்தில் இருந்து காலை 7.17, 8.19, 9.00, 9.22, 9.40, 9.50 மாலை 6.26, இரவு 7.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், கூடுவாஞ்சேரி - பல்லாவரம் இடையே இன்று முதல், வரும் 14ம் தேதி வரை காலை 9.20 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், இரவு 10.30 மணி முதல் அதிகாலை 2.45 மணி வரையிலும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சிறப்பு ரயில்கள்: சிறப்பு ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது 15 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல், வரும் 14ம் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.45, 10, 10.15, 10.30, 10.45, 11, 11.15, 11.30, 11.45, மதியம் 12, 12.15, 12.30, 12.45, இரவு 10.40, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் சிறப்பு மின்சார ரயில் பல்லாவரம் வரை இயக்கப்படுகிறது. பல்லாவரத்தில் இருந்து காலை 10.17, 10.32, 10.47, 11.02, 11.17, 11.32, 11.47 மதியம் 12.02, 12.17, 12.32, 12.47, 1.02, 1.17, 1.42 இரவு 11.30, 11.55 ஆகிய நேரங்களில் சிறப்பு மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகிறது.

செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. விரைவு மின்சார ரயில்கள்: இன்று முதல், வரும் 14ம் தேதி வரை செங்கல்பட்டிலிருந்து காலை 7.45, 8.05, 8.50 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் விரைவு மின்சார ரயில்களும், அரக்கோணத்தில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் விரைவு மின்சார ரயிலும், அதற்கு மாற்றாக தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமான ரயில்களை போல அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் வகையில் இயக்கப்படும். 14ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 8.26, 8.39 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மகளிர் சிறப்பு மின்சார ரயில், அதற்கு மாற்றாக அனைவரும் பயணிக்கும் பொது மின்சார ரயிலாக இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.