Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

புஸ்ஸி ஆனந்த் முன்னாள் எம்எல்ஏ என்பதால் வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட வேண்டும்: அரசு தரப்பு வாதம்

மதுரை: த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை தொடங்கியது. கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமின் கோரினர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இருவரும் முன்ஜாமின் கோரிய மனு விசாரணை நடைபெற்று வருகிறது. புஸ்ஸி ஆனந்த் முன்னாள் எம்எல்ஏ என்பதால் வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட வேண்டும் என அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.