பேருந்தில் மாற்றுத் திறனாளி பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூல்: இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவு
சென்னை: அரசுப் பேருந்தில் மாற்றுத்திறனாளியிடம் கட்டணச் சலுகை டிக்கெட் வழங்காமல் ரூ.10 கூடுதலாக வாங்கிய நடத்துநரிடம் இருந்து இழப்பீடாக ரூ.17,010 செலுத்த போக்குவரத்துக் கழகத்திற்கு நெல்லை நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2023ம் ஆண்டு நெல்லையைச் சேர்ந்த இசக்கி செல்வம் என்பவர் மதுரைக்கு பயணம் செய்யும் போது, கட்டணச் சலுகை இல்லாத டிக்கெட் கட்டணம் வசூலித்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார்.