Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே இடிகாட்டில் புதைக்கப்பட்ட 10 வயது சிறுமியின் உடல் மாயம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே இடிகாட்டில் புதைக்கப்பட்ட 10 வயது சிறுமியின் உடல் மாயமாகியுள்ளது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பந்தநல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த தர்ஷிகா என்ற 10 வயது சிறுமிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அவர் திருவாரூர் மற்றும் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு நேற்று உறவினர் அஞ்சலி செலுத்திய பின்னர் அங்குள்ள மன்னியாற்று இடுகாட்டில் புகைக்கப்பட்டது. இன்று காலை சடங்குகள் செய்வதற்காக உறவினர் இடுகாட்டில் சென்று பார்த்த போது சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே சிறுமியின் ஆடைகள், எலுமிச்சம்பழம், குங்குமம் உள்ளிட்டவை இருந்தது. இந்த நிலையில், அந்த சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக பந்தநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து சம்பவத்திற்கு வந்துள்ள போலீசார் சிறுமியின் உடலை எடுத்து சென்றது யார்..? எப்போது எடுத்து சென்றனர்..? என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.