சென்னை: பாஜகவின் குரலாக எடப்பாடி பழனிசாமி ஒலிக்கிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி வரி குறைப்பை வரவேற்று எடப்பாடி பழனிசாமி பதிவு பாஜகவின் குரலாக அவர் பேசுவதை காட்டுகிறது. ஜி எஸ்டி வரி மாற்றங்களை எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக பாராட்டியுள்ளார். தமிழ்நாட்டுக்கு உரிய நிதி பங்கீடு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிடாதது ஏன்? மாநில அரசின் வரி வருவாய், நிதி சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என எடப்பாடி வலியுறுத்தாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
+
Advertisement