Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பைக் மீது போலீஸ் வாகனம் மோதி குழந்தை, பெற்றோர் பரிதாப பலி

திருப்புவனம்: மதுரை மாவட்டம், மேலூர் அருகே சிட்டம்பட்டியை சேர்ந்தவர் பிரசாத் (35). இவர் தனது மனைவி சத்யா (25), மகன் அஷ்வின் (5) ஆகியோருடன் நேற்று சக்குடி அருகே அனஞ்சியூரில் உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்றார். பின்னர் மாலை ஊருக்கு திரும்பினர். அதே வாகனத்தில் சிட்டம்பட்டியை சேர்ந்த சோனை ஈஸ்வரி (30) என்பவரும் வந்தார். இவர்கள் அதிகரை அருகே சென்றபோது, எதிரே வந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் வாகனம் டூவீலர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து பிரசாத், சத்யா, அஷ்வின் ஆகியோர் உயிரிழந்தனர். சோனை ஈஸ்வரி படுகாயமடைந்தார். இச்சம்பவத்தை கண்டித்தும், உடனடியாக போலீஸ் வாகன ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தியும், பிரசாத் உடலை எடுக்கவிடாமல், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.அவரிடம் சிவகங்கை எஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.