Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகார் மாநிலத்தில் 52.3 லட்சம் வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் திட்டம்

பாட்னா: பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து 52.3 லட்சம் வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு என 52.3 லட்சம் வாக்காளர்களை நீக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இப்பணியானது வரும் 25-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பீகார் வாக்காளர் பட்டியலில் இறந்த அல்லது இடம்பெயர்ந்த வாக்காளர்கள் என 52 லட்சம் பேரை ஆணையம் திட்டமிட்டுள்ளது. சிறப்பு தீவிர திருத்தத்தின்படி வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்டு 1-ம் தேதி வெளியிடப்படும். இந்தப் பட்டியலில் அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பீகார் சட்டசபைத் தேர்தலுக்கு முன் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவது அதன் அரசியலமைப்பு கடமையாகும். முழு செயல்முறையும் நிலையான மற்றும் அதிகார வரம்புக்குட்பட்ட முறையில் நடத்தப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.