பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: சட்டவிரோத நடைமுறை கண்டறியப்பட்டால் முழுமையாக ரத்து செய்யப்படும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
டெல்லி: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு நாடு முழுவதற்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தான் வகுத்துள்ள விதிகளையே தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை என பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டி இருந்தார். பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில் சட்டவிரோத நடைமுறை கண்டறியப்பட்டால், அது ரத்து செய்யப்படும் என பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.