பீகார்: பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு சாலையில் கொட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளில் முதற்கட்டமாக தொகுதிகளுக்கு 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. சாராய்ரஞ்சன் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் ஒப்புகைச் சீட்டுகள் சாலையில் கிடந்தன. சாலையோரம் வாக்காளர் ஒப்புகைச்சீட்டுகள் கொட்டப்பட்டது குறித்து சமஸ்திபூர் தேர்தல் அதிகாரி விசாரணை. ஒப்புகைச்சீட்டுகளை அலட்சியத்துடன் கையாண்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு அளித்துள்ளது.
+
Advertisement

