பாட்னா : பீகார் சட்டமன்றத் தேர்தலில் 100 வயதைக் கடந்த 14,000 பேர் வாக்களிக்கவுள்ளனர். பீகாரில் மிக மூத்த குடிமக்கள் பிரிவில் 100 வயதைக் கடந்தோர் 14,000 இடம்பெற்றுள்ளனர். பீகார் வாக்காளர் பட்டியலில் 85 வயதைக் கடந்தோர் 16.07 லட்சம் பேர் உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. பீகாருக்கு 2 கட்டங்களாக நவம்பர் 6, 11ம் தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது.
+
Advertisement