Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மழை காரணமாக குற்றாலத்தில் பிரதான அருவி ஐந்தருவியில் குளிக்கத் தடை

தென்காசி: மேற்கு தொடர்சி மலைகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலத்தில் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குற்றாலத்தில் பிரதான அருவி ஐந்தருவியில் குளிக்கத் வனத்துறை தடைவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழையையொட்டி தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11.30 மணி நிலவரப்படி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளான இன்று அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நீர்வரத்து குறையும்பட்சத்தில் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.