Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெயரைக் கூட எழுதத் தெரியாதவர்களுக்கு ரயில்வே துறையில், குரூப் D பிரிவில் வேலை வழங்கப்பட்டுள்ளது: லாலு யாதவ் மீதான பணி நியமன மோசடி வழக்கில் சிபிஐ தகவல்

டெல்லி: பெயரைக் கூட எழுதத் தெரியாதவர்களுக்கு ரயில்வே துறையில், குரூப் D பிரிவில் வேலை வழங்கப்பட்டுள்ளது. கையொப்பங்கள், மாற்றுச் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் அனைத்துமே போலியானவை என RJD தலைவர் லாலு யாதவ் மீதான பணி நியமன மோசடி வழக்கில் சிபிஐ, நீதிமன்றத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளது.

லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினருக்கு விற்கப்பட்ட குறைந்த மதிப்புள்ள நிலத்திற்கு ஈடாக தகுதியற்ற வேட்பாளர்கள் குரூப்-டி ரயில்வே வேலைகளில் மோசடியாக நியமிக்கப்பட்டதாக சிபிஐ டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் நில ஒப்பந்தங்களுக்கு ஈடாக தங்கள் பெயர்களை கூட எழுத தெரியாதவர்களுக்கு குரூப்-டி வேலைகள் வழங்கப்பட்டதாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கூறியுள்ளது.

“கையொப்பங்கள், இடமாற்றச் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் அனைத்தும் போலியானவை என்றும் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களில் தாங்கள் ஒருபோதும் சேராத பள்ளிகளைக் குறிப்பிட்டுள்ளதாக டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ மூத்த வழக்கறிஞர் டிபி சிங் தெரிவித்துள்ளார். மேலும், போலி சான்றிதழ்களைத் தயாரிப்பதற்கான ஒரே நோக்கத்திற்காக ஒரு பள்ளி இருப்பதையும் சிபிஐ மேற்கோள் காட்டியது

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிறுபிக்க ஆதாரங்கள் இருப்பதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக் கோரிய லாலு பிரசாத் யாதவின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துள்ளது.