Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை? - நேரலை அப்டேட்ஸ்

சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை ெகாண்டு இருந்த அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை-தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று அது தமிழக கடலோரப் பகுதிக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களி்ல ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, ராமநாதபுரம், திண்டுக்கல், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், காஞ்சிபுரம், அரியலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், கரூர், வேலூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கபப்ட்டுள்ளது.

மழை காரணமாக நெல்லையில் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிற வகுப்புகளுக்கு விடுமுறை விடுவது பற்றி சூழலை பொறுத்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.