Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார்.. பிற கட்சிகள் குறித்து பொய் செய்தி, அவதூறு பரப்புவதுதான் அவர் வேலை: எடப்பாடி பழனிசாமி!!

கோவை: விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக போட்டியிட்டால் 4-வது இடம் பிடிக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;

அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

அண்ணாமலை மெத்தப்படித்தவர், ஒரு பெரிய அரசியல் ஞானி என்றும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததற்கான காரணத்தை ஏற்கனவே தெரிவித்துள்ளோம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பாஜக வளர்ந்ததாக மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சி

தான் தலைவரான பிறகு பா.ஜ.க. வளர்ந்துள்ளதாக அண்ணாமலை மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்.

அதிமுகவை குறைகூறி அண்ணாமலை அரசியல்: பழனிசாமி

அதிமுகவை தொடர்ந்து குறை கூறியே அரசியல் செய்கிறார் என்று எடப்பாடி கூறியுள்ளார்.

அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார்: பழனிசாமி

அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார்; அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு என்ன திட்டங்களை பெற்றுக் கொடுத்தார் என்று கூறினார்.

அதிமுக கார்ப்பரேட் கம்பெனி அல்ல: பழனிசாமி

அதிமுக ஒன்றும் கார்ப்பரேட் கம்பெனி அல்ல. பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுப்படியே ஓ.பி.எஸ். கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அண்ணாமலை போன்றவர்களால் தான் மத்தியில் பாஜக பெரும்பான்மையை இழந்தது. எம்.ஜி.ஆர்.மறைவுக்கு பிறகு அதிமுக பிளவுபட்டபோது ஜானகி எப்படி நடந்துகொண்டாரோ அதேபோல் சசிகலா நடந்துகொள்கிறார். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது பொதுக்குழு முடிவு; மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி கூறியுள்ளார்.