கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் பெரியார் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை நடக்கிறது. புத்தகத்தை மூத்த ஊடகவியலாளர் விஜய் சங்கர் வெளியிட, திமுக எம்.எல்.ஏ. எழிலன் பெற்றுக் கொள்கிறார். பெரியார் பன்னாட்டு அமைப்பு சார்பில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது எழுத்தாளர் வித்யா பூஷன் ராவத்க்கு வழங்கப்படுகிறது. கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக மாநாட்டுக் கூடத்தில் நாளை மாலை 6 மணிக்கு விழா நடைபெற உள்ளது.
+
Advertisement
