ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் காயமடைந்த இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஐ.சி.யு.வில் அனுமதி..!!
ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் காயமடைந்த இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப் பட்டுள்ளார். விலா எலும்பில் காயமடைந்த ஸ்ரேயாஸுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில் சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிட்னி மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெறுவார் என்றும் பிசிசிஐ தகவல் தெரிவித்தது.
