Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டு பாரா பேட்மிண்டன் வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க வேட்டையை நிகழ்த்திக் காட்டி, பதக்கங்களைக் குவித்துள்ள நம் தமிழ்நாட்டு பாரா பேட்மிண்டன் வீரர்கள் அபாரச் சாதனைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளை முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தின் பாரா பேட்மிண்டன் வீரர்கள் இந்தியாவுக்காக 6 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று மீண்டும் வரலாறு படைத்துள்ளனர். பாரா நட்சத்திரங்கள் சிவராஜன், சாருமதி, சுதர்சன், ருத்திக், ஜெகதீஷ் மற்றும் தினேஷ் ஆகியோர் பதக்கங்களை வென்றுள்ளனர். இதற்கு பாராட்டு தெரிவித்து முதல்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்வரின் சமூக வலைதள பதிவில்:

ஆஸ்திரேலியாவில் நடைபெறும்சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க வேட்டையை நிகழ்த்திக் காட்டி, பதக்கங்களைக் குவித்துள்ள நம் தமிழ்நாட்டு பாரா பேட்மிண்டன் வீரர்களின் அபாரச் சாதனைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்! மேலும் மேலும் நீங்கள் பெற்று வரும் வெற்றிகளால், விளையாட்டுத் துறையில் உலக அளவில் தமிழ்நாடு தலைசிறந்து வருவது உறுதியாகி வருகிறது. என கூறியுள்ளார்.