அட்சயத் திருதியையொட்டி ஒரே நாளில் 3வது முறை உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.54,160க்கு விற்பனை..!!
சென்னை: அட்சயத் திருதியையொட்டி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 3வது முறை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.6,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.54,160க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.91.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.