Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மும்பைக்கு மிரட்டல்: உபியை சேர்ந்த ஜோதிடர் கைது

நொய்டா: மும்பையில் 400 கிலோ எடையுள்ள ஆர்டிஎக்ஸ் வெடிபொருளுடன் 14 தீவிரவாதிகள் . 34 வாகனங்களை கொண்டு குண்டுவெடிப்புகளை நடத்த உள்ளனர் என்றுபோனில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மிரட்டல் செய்தி உபி மாநிலம் நொய்டாவில் இருந்து வந்ததை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து செக்டார் 113 போலீசார் நடவடிக்கை எடுத்து அஸ்வினி குமாரை(54) கைது செய்தனர்.

ஜோதிடம் மற்றும் வாஸ்து நிபுணரான குமாரை மும்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர். நண்பரை பழிவாங்குவதற்கு போலி வெடிகுண்டு மிரட்டல் செய்தி அனுப்பியதை ஒப்பு கொண்டார்.