ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. ஆசிய கோப்பை குரூப் சுற்றில் ஏற்கனவே பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திய தெம்புடன் இந்தியாவும், அந்தத் தோல்விக்கு பழிதீர்க்கும் வெறியுடன் பாகிஸ்தானும் களமிறங்குகிறது.