Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவால் வெளிநாடு செல்ல அனுமதி கோரிய நிலையில் உ.பி. சிறப்பு நீதிமன்றம் அனுமதி!!

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் வெளிநாடு செல்ல அனுமதி கோரிய நிலையில் உத்தரப் பிரதேச சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2014 மக்களவைத் தேர்தலின்போது அமேதி மாவட்டத்தின் கெளரிகஞ்ச் மற்றும் முசாபிர்கானா பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். இதன் காரணமாக எந்தவொரு வெளிநாட்டுப் பயணத்திற்கும் முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தனது கடவுச்சீட்டின் தற்போதைய நிலை காரணமாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, அதை புதுப்பிக்க அனுமதிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உத்தரப் பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், கெஜ்ரிவாலின் கடவுச்சீட்டைப் புதுப்பித்துக்கொள்ள நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது. அதன்படி, அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்று திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், அவர் வெளிநாடு செல்ல அனுமதி கோரிய நிலையில், அவருக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.