அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வளைவில் திரும்பிய பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கியது. தா.பழூர் வழியாக அரியலூர் சென்ற அரசு பேருந்து அருள்மொழி கிராமத்தில் வயலில் இறங்கியது. பேருந்து மின்கம்பத்தில் மோதாமல் வயலில் இறங்கியதால் பயணிகள் நல்வாய்ப்பாக காயமின்றி தப்பினர்.
+
Advertisement