Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாத்தனூர் அணையில் இருந்து மாலை 6 மணியளவில் 9,000 கன அடி வரை நீர் திறக்கப்படலாம் என அறிவிப்பு!

சாத்தனூர் அணையில் இருந்து மாலை 6 மணியளவில் 9,000 கன அடி வரை நீர் திறக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரூர், ஊத்தங்கரை, கல்லாறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்படுகிறது. அணையில் இருந்து தற்போது 5,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் 9,000 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது.