Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு அஞ்சல் மூலம் அன்புமணிக்கு நோட்டீஸ்..!!

சென்னை: 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு அன்புமணிக்கு அஞ்சல் மூலம் நோட்டீஸ் வழக்கப்பட்டுள்ளது. அன்புமணி, ராமதாஸ் இருவருக்கும் மோதல் முற்றிய நிலையில் இருவரும் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 9ம் தேதி சென்னையில் அன்புமணி தரப்பு பொதுக்குழு நடத்தினர்.

இதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் அருகே உள்ள சங்கமித்திரா நேற்றைய தினம் மருத்துவர் ராம்தாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாமக ஒழுங்கு நடைமுறை இயக்குனர் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றசாட்டுகளை முன்வைத்து பொதுக்குழு வாசிக்கப்பட்டது. கடந்த டிசம்பரில் நடைபெற்ற பாமக சிறப்பு கூட்டத்தில் மைக்கை அன்புமணி ராமதாஸ் வீசியது, பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி வைத்தது .

40 முறை ராமதாஸிடம் இது தொடர்பாக பொய் பேசிவருவதாக கூறியதாகவும். இது போன்று மேலும் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதி பெறாமல் நடைபயணம் மேற்கொண்டது உள்ளிட்ட1 6 குற்றசாட்டுகளை அந்த பொதுக்குழு தீர்மானமாக வாசிக்கப்பட்டது. இந்தநிலையில் பொதுக்குழு இதற்கான பதிலை பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவிப்பார் என்று எதிர் பார்க்கப்பட நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் பேசாத நிலையில் தற்போது அன்புமணி ராமதாஸ் 16 குற்றசாட்டுகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலமாக விளக்கம் கேட்டு பாமக தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.