Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆலங்குளம் பகுதியில் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த 9ம் வகுப்பு மாணவி, திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

தென்காசி: தென்காசி, உடையம்புளி பகுதியில் பள்ளிக்கு புறப்பட்ட மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பெரிய கிராமம் உடையம்புளி அந்த கிராமத்தை சேர்ந்தவர் முருகன் இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரது மாணவி சங்கரம்மாள் பீடி சுற்றும் வேலை செய்துவருகிறார். இந்த தம்பதிக்கு பாலகிருஷ்ணவேணி என்னும் 13 வயது மகளும், சிவா 3 வயது மகனும் உள்ளனர். ஆலங்குளம் அருகே உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 9 வகுப்பு படித்து வருகிறார் பாலகிருஷ்ணவேணி. இவருக்கு பிறகும் போது இதயத்தில் பிரச்சனை இருந்ததாகவும், இது குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதற்காக மாத்திரை எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு மாத்திரை எடுப்பதற்கு தவறியதாக கூறப்படுகிறது. இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்ட மாணவி சீருடை அணிந்து புறப்பட்டு வீட்டு வாயில் பகுதியில் சென்ற போது திடீர் என மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர்கள் பெற்றோர்கள் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.