Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விமானப்படையில் அதிகாரியாக திருநெல்வேலி பெண் சாதனை

சென்னை: திருநெல்வேலி பெண் விமானப்படையில் அதிகாரியாக சாதனை படைத்துள்ளார். விமானப்படை அதிகாரி ஆர். பொன்ஷர்மினியின் வாழ்க்கை கதை, முயற்சி, பொறுமை மற்றும் கனவுகளை விடாமல் பின்தொடர்வதற்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. திருநெல்வேலியில் பிறந்து, சென்னையில் வளர்ந்த அவர், மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது அம்மா அப்பா இருவரும் தையல் வேலை செய்து கடினமாக உழைத்தனர்.

பட்டப்படிப்பு முடித்த பிறகு, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இருந்த ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அவர்களின் அனுபவங்களையும் கதைகளையும் கேட்டபோது, சீருடை அணிய வேண்டும் என்ற அவரது குழந்தைப் பருவக் கனவை மீண்டும் தூண்டின.

பொன்ஷர்மினி கடினமாக உழைத்தார், அவரது விடாமுயற்சி இறுதியாக அவரை போட்டித்தேர்வில் வெற்றி பெற வைத்து இந்திய விமானப் படையில் இப்போது ஒரு அங்கமாக்கியுள்ளது. 2025ம் ஆண்டு தெலங்கானாவில் உள்ள துண்டிகல் விமானப்படை பயிற்சி மையத்தில் மகளிர் கேடட் கேப்டனாக பொறுப்பேற்றார். இப்போது விமானப்படை அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம் அவரது கனவு நிறைவேறியது.