Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாஜி பேரூராட்சி தலைவருடன் அதிமுக பெண் நிர்வாகி ஓட்டம்: மனைவியை மீட்டு தரக்கோரி கணவர் புகார்

பவானி: மாஜி பேரூராட்சி தலைவருடன் ஓட்டம் பிடித்த அதிமுக பெண் நிர்வாகியை மீட்டுத் தரும்படி அவரது கணவர் போலீசில் புகார் செய்துள்ளார். ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அடுத்த ஊமாரெட்டியூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (54). அதிமுகவைச் சேர்ந்த இவர் அம்மாபேட்டை பேரூராட்சி முன்னாள் தலைவராகவும், பேரூர் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு, மனைவி, இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணமாகிவிட்டது. இவரது வீட்டுக்கு அருகில் வசிப்பவர் மகாலிங்கம்.

லாரி டிரைவர். இவரது மனைவி உஷாராணி (34). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். அம்மாபேட்டை பேரூர் அதிமுக துணைச் செயலாளராக உஷாராணி பொறுப்பு வகித்து வருகிறார். இருவரும் அருகருகே வசித்து வந்த நிலையில், கட்சிப் பணிகள் தொடர்பாக அவ்வப்போது சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே தவறான உறவு மலர்ந்துள்ளது.

இதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த இருவரும், கடந்த ஒரு வாரத்துக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்து கொண்டு நெருக்கமாக இருக்கும் படங்கள் வாட்ஸ்அப் மூலம் பரவி, அம்மாபேட்டை பகுதியில் வைரலானது.

இதனால், அதிர்ச்சி அடைந்த டிரைவர் மகாலிங்கம் தனது மனைவியை காணவில்லை எனவும், செந்தில்குமாரிடமிருந்து மனைவி உஷாராணியை மீட்டு தருமாறும் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.