அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடர்பாக அமித் ஷா, நிர்மலா சீதாராமனிடம் பேசினேன்: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
கோவை: அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடர்பாக அமித் ஷா, நிர்மலா சீதாராமனிடம் பேசினேன் என டெல்லியிலிருந்து திரும்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் பேட்டியளித்தார். மேலும் ஆவர் அளித்த பேட்டியில்; "அமித்ஷாவை நான் சந்தித்து பேசிய போது, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வந்தார். ஈரோட்டில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஹரித்வார் செல்வதாக கூறினேன். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்தது" என தெரிவித்துள்ளார்.