டெல்லி: அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வானதை எதிர்த்த மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கட்சி முதன்மை உறுப்பினர்களால் நேரடியாக தேர்வு செய்வதற்கு பதிலாக பொதுக்குழுவால் எடப்பாடி தேர்வானதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
+
Advertisement


